Chennai super kings
அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடும் எனக்கூறியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியாகும்.
சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 40 வயதாகிவிட்டது. ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஐபிஎல்-ல் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார். சென்னை மைதானத்தில் தான் ஓய்வு பெறுவேன் என்ற அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்தாண்டு அறிவிப்பும் வந்துவிட்டது. இதனால் எப்படியாவது கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு அவரும் விடைபெறுவார் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.