Corona virus
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மீண்டும் ஒருவருக்கு கரோனா!
டெல்லி அணியில் மீண்டும் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை அணியுடன் டெல்லி அணி மோத இருந்த நிலையில், கரோனா மீண்டும் தலைதூக்கியதையடுத்து, போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அணியுடனான போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு டெல்லி கேபிட்டல்ஸ் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 15ஆவது சீசனில் டெல்லி அணி தனிமைப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.