Dhaka premier league
வங்கதேச லீக் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
வங்கதேசத்தில் நடைபெறும் 50 ஓவர் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியில் விஹாரி உள்பட ஏழு இந்திய வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.
விஹாரி, அபிமன்யூஸ் ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபரஜித், அசோக் மெனேரியா, சிராக் ஜானி, குரிந்தர் சிங் ஆகிய ஏழு வீரர்களையும் ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து இன்று முதல் தொடங்கியுள்ள வங்கதேசத்தின் லிஸ்ட் ஏ போட்டியான டிபிஎல் போட்டியில் இவர்கள் ஏழு பேரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.