Dy patil t20 cup
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும், சமீப காலங்களில் டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தவர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்து, அத்தொடரின் பாதியிலேயே விலகினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் என அனைத்து தொடர்களிலிருந்தும் விலகினார்.
இதனால் அவர் ஐபிஎல் தொடரில் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகினார். அதற்கேற்றது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் நடப்பு சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமித்து அதிரடி காட்டியது.