England cricket team
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலைப் பெற்ற நிலையிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் எனும் அதிரடியான ஆட்டமுறையை இங்கிலாந்து அணி பின்பற்றி வெற்றிகளை குவித்து வந்ததால், இந்தியாவில் அவர்கள் எவ்வாறு செயல்படுவாகள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. மேலும் இங்கிலாந்தின் பாஸ்பால் திட்டம் இந்தியாவில் எடுபடாது என பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனல் அவர்களின் விமர்சனங்கள் அனைத்திற்கு இங்கிலாந்து அணி தங்களது வெற்றியின் மூலம் பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றியை அந்த அணியின் முன்னாள் வீரர் நாசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.