England cricket team
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டியில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதுடன் 153 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அவரைத் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் பின் தங்கியது.