England cricket team
முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் - ஜோஸ் பட்லர்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இரண்டாவது இடத்தைப் பெற்ற நியூசிலாந்து அணியும் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
முந்தைய உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே இங்கிலாந்திடம் மல்லுக்கட்டிய நியூசிலாந்து சூப்பர் ஓவர் முடிவிலும் சமனில் நீடித்ததால் அதிக பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு பழிதீர்க்க இது சரியான சந்தர்ப்பமாக எதிர்பார்க்கப்படுகிறது.