England team
இங்கிலாந்தின் ஆட்டம் நிலையானதாக இருக்க முடியுமா? - ஸ்டீவ் ஸ்மித் கேள்வி!
இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 5ஆவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் கில்லி என நிரூபித்தது. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
அப்போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று பர்மிங்காமில் நடைபெற்றது. அதில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அட்டகாசமாக செயல்பட்டு வலுவான நிலையில் இருந்த இந்தியாவை கடைசி 2 நாட்களில் புரட்டி எடுத்த இங்கிலாந்து 378 ரன்களை அசால்டாக சேசிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை இந்தியா நிஜமாக தவறியது.