Harbhajan singh
ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவது விமர்சனத்திற்கு பெரிய அளவில் உள்ளாகி வருகிறது. மிகக் குறிப்பாக தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியின் கீழ் முக்கியமான போட்டிகளில் திட்டங்களும் மனநிலையும் இந்திய வீரர்களிடம் மிகவும்மோசமாக இருக்கிறது.
இதுகுறித்து பேசி இருந்த கவாஸ்கர், தான் ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் தமக்கு கேப்டனாக திருப்தி அளிக்கவில்லை என்றும், சிறந்த வீரர்களை வைத்திருந்தும் மிக மோசமாக கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.