Harbhajan singh
இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் - ஹர்பஜன் சிங்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடருக்கான பயிற்சி போட்டிகள் நிறைவு பெற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்று அனைத்து அணிகளும் கோப்பை வெல்வதற்காக தயாராகியுள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
முன்னதாக 2011 உலகக் கோப்பையை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கைகளில் எப்படியாவது வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் யுவராஜ் சிங் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அபாரமாக சிறப்பாக விளையாடி சாதித்து காட்டினர். ஏனெனில் 16 வயதில் அறிமுகமாகி உலகின் அனைத்து பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் அதற்கு முந்தைய 5 உலகக் கோப்பைகளிலும் தோல்விகளையே சந்தித்தார்.