Ipl auction
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டது. அந்தவகையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
Related Cricket News on Ipl auction
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். ...
-
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத இரண்டு அணிகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
அணியின் கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் - சஞ்சீவ் கோயங்கா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் முடிவு செய்யப்பட்டு, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோய்ங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. டெல்லி கேப்பிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இம்முறை இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் என்று கேஎல் ராகுல் கூறியதாக டெல்லி உரிமையாளர் பாரத் ஜிண்டல் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
15 பந்துகளில் அரைசதம் விளாசிய லிவிங்ஸ்டோன்; ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம்!
அபுதாபி டி10 லீக் தொடரில் பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
-
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலாத்தில் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகபட்ச ஏலத்திற்கு சென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24