Advertisement
Advertisement

Irfan pathan

தேவையற்ற விசயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதை விடவேண்டும் - இர்ஃபான் பதான்!
Image Source: Google

தேவையற்ற விசயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதை விடவேண்டும் - இர்ஃபான் பதான்!

By Bharathi Kannan October 19, 2023 • 20:52 PM View: 238

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் இருந்த குறிப்பிட்ட இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை பார்த்து “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மைதானத்தில் நடந்த தவறான நடத்தை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வரியம் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வ புகாரும் அளித்துள்ளது.

இதற்கிடையில் ரசிகர்களின் நடத்தையை பலர் குற்றம்சாட்டினாலும், அதை தீவிரப்படுத்திவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் பாகிஸ்தானின் புகார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளரான இர்ஃபான் பதான், வர்ணனையாளராக பேசிக்கொண்டிருக்கும் போது அவர் இந்திய அணியில் இருந்த போது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் நடந்த மோசமான சம்பவம் குறித்து விளக்கினார்.

Related Cricket News on Irfan pathan