Jacques kallis
விராட் கோலியால் இந்திய அணிக்கு நன்மை கிடைக்கும் - ஜாக் காலிஸ்!
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை சமன் செய்து, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதில் கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் அபாரமான முறையில் வென்றது. இதன் மூலம் தொடரையும் சமன் செய்தது.
இதற்கு அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஃபிரான்சிசைஸ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் எல்லா அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.