Jason holder
ஐபிஎல் மெகா ஏலம் 2022: பேட்டர் & ஆல்ரவுண்டர்கள்; ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டிய அணிகள்!
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.
இதையாடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது செட் வீரர்களுக்கான ஏலம் பரபரப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக இடம்பெற்ற இந்திய வீரர் மனீஷ் பாண்டேவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 4.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.