Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Kiran more

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கெய்க்வாட்டிற்கு வாய்ப்புள்ளது - கிரண் மோர்!
Image Source: Google

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கெய்க்வாட்டிற்கு வாய்ப்புள்ளது - கிரண் மோர்!

By Bharathi Kannan August 20, 2023 • 16:27 PM View: 278

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த தொடரில் ரோஹித், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார். 

Related Cricket News on Kiran more