Mohammad siraj
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தை விளக்கிய சிராஜ்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜனவரி 3ஆம் தேதி நேற்று கேப்டவுன் நகரில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த போட்டி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் அந்த அணி பேட்டிங் செய்ய துவங்கியதும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே பந்துவீச்சில் தனது அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சிராஜ் ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்தும் படி மிகப் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.