Mumbai police
பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல்துறை; வைரல் பதிவு!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரணின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 214 ரன்களை குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியும் ஏறத்தாழ இலக்கை விரட்டியது.
இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே சென்றது. 2ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3ஆவது பந்தில் திலக் வர்மாவை அர்ஷ்தீப் சிங் போலடாக்க, மிடில் ஸ்டம்ப் உடைந்து சிதறியது.