
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரணின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 214 ரன்களை குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியும் ஏறத்தாழ இலக்கை விரட்டியது.
இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே சென்றது. 2ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3ஆவது பந்தில் திலக் வர்மாவை அர்ஷ்தீப் சிங் போலடாக்க, மிடில் ஸ்டம்ப் உடைந்து சிதறியது.
இதனால் கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் இம்பேக்ட் பிளேயராக நேஹல் வதேரா இறங்கினார், ஆனால் 4ஆவது பந்திலும் அர்ஷ்தீப் சிங் மிடில் ஸ்டம்பை இரண்டாக பிளந்து மாஸ் காட்டினார். அடுத்தடுத்து இரண்டு பந்துகள் மிடில் ஸ்டம்பை உடைத்து அனைவரையும் அசர வைத்தார்.