Oval test
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி தாங்கள் பெற்ற இந்த வெற்றி குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்திருந்தார்.