Praveen jayawickrama
IND vs SL: கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா; இலங்கைக்கு 230 ரன்கள் இலக்கு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டிய தவான் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர், பிரித்வி ஷாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரித்வி ஷா 49, சாம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து இருவரும் அரைசதத்தை தவறவிட்டனர்.