Punjab kings
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறிது குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
ஐபிஎல்லில் 2018ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த கேஎல் ராகுல், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் அபாரமாக ஆடியிருக்கிறார். ஆனால் ஒரு அணியாக அந்த அணி வீரர்கள் இணைந்து சிறப்பாக ஆடாததால் வெற்றி பெறமுடியவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணியை கடந்த சில சீசன்களாக ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனி ஒருவனாக தூக்கி நிறுத்திய கேஎல் ராகுல், தற்போது செம ஃபார்மில் ஆடிவருகிறார். கடந்த சீசனில் 626 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விட வெறும் 9 ரன்களே ராகுல் குறைவாக அடித்திருந்தார்.