Ravichandra ashwin
அஸ்வின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
இந்திய அணி நிர்வாகத்தின் தவறான அணித் தேர்வின் காரணமாக இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து பட்டத்தை இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருந்தும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் அணியில் சேர்க்கப்படாதது பெரிய சர்ச்சை ஆனது.
இத்தோல்விக்கு பின் தற்போது டிஎன்பில் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வழிநடத்தி வரும் அஸ்வின், தனிப்பட்ட முறையில் சில கருத்துக்களை மறைமுகமான முறையில் நாகரீகமாக வெளியில் தெரிவித்து தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்து இருந்தார்.