Advertisement
Advertisement

Rinku singh

முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!
Image Source: Google

முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!

By Bharathi Kannan August 21, 2023 • 11:24 AM View: 197

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. அதே சமயத்தில் டி20 போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக இதுவரை தோற்றதில்லை என்கின்ற சாதனையையும் தக்கவைத்து இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் இரண்டு விக்கட்டுகள் வேகமாக விழ ருத்ராஜ் 58 ரன்கள், சஞ்சு சாம்சன் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்கள். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங், ஷிவம் தூபே ஆகியோரும் அதிரடி காட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்ற நல்ல நிலையை எட்டியது. 

Related Cricket News on Rinku singh