Rinku singh
ஜெய்ஷ்வால், ரிங்கு சிங்கின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பல்வேறு திருப்புமுனைகளை கொண்டதாக அமைந்ததோடு, மற்ற ஐபிஎல் தொடர்களை போல அல்லாமல் கடைசி வாரம் வரை நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை குஜராத் அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. மற்ற 3 இடங்களுக்கும் எந்த அணி தகுதி பெறும் என்பதில் இன்றளவும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தின் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க விதமாக இருக்கும் இரண்டு வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக இறங்கி கலக்கிவரும் ஜெய்ஸ்வால் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பினிஷிங் செய்து வரும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் ஆகும்.