Advertisement
Advertisement

Rishabh pant

ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
Image Source: Google

ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!

By Bharathi Kannan September 19, 2023 • 14:18 PM View: 237

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று அவரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

Related Cricket News on Rishabh pant