Ritired out
அஸ்வின் செய்தது சரியா? ஐபிஎல்-ல் புதிய சர்ச்சை!
ஐபிஎல் வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலாவதாக பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முதல் 10 ஓவர்களில் அந்த அணி பெரிய சிக்கலை சந்தித்தது.
4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 67 ரன்களை மட்டுமே அவர்கள் குவித்து இருந்ததால் பின் வரிசையில் வரும் வீரர்கள் எப்படி பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் களம்புகுந்து ஹெட்மயர் உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 15 ஓவர் வரை விக்கெட் விழாமல் பந்துகளுக்கு இணையாக ரன்களை குவித்து இருக்க அதன் பின்னர் 16-வது ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினர்.
Related Cricket News on Ritired out
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47