Ruturaj gaikwad
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தினால் இந்திய அணி ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையிலேயே தொடரை வென்றது.
இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த பொழுது பவர் பிளேவில் அதிக பந்துகளை ஜெய்ஸ்வால் எடுத்து விளையாடினார். இதன் காரணமாக ருத்ராஜ் பவர் பிளேவில் அதிக பந்துகளை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து பவர் பிளே கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உடனே ஸ்ரேயா மற்றும் சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். எனவே ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ருத்ராஜுக்கு வந்தது.