Shubman gill
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 11ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றஇந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் சார்பாக அனுபவ வீரர் முகமது நபி 42 ரன்களை குவித்தார். பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 40 பந்துகளை சந்தித்த ஷிவம் துபே 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.