Shubman gill
இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன் - ஹர்பஜன் சிங்!
பத்து அணிகள் கலந்து கொண்ட ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சுப்மன் கில் தான் இந்தியாவுக்காக அதிக ரன் அடிப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.