Sreesanth retirement
கேரள கிரிக்கெட் வாரியம் சதி செய்துவிட்டது - ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு!
உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேரளாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் அதன்பின் மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடத் தொடங்கினார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை யாருமே எதிர்பாராத வண்ணம் எம்எஸ் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று சரித்திரம் படைத்தது. அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி மற்றும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணியின் மிஸ்பா-உல்-ஹக் கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்தது போன்ற பல வகைகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரீசாந்த் முக்கிய பங்காற்றி இருந்தார்.
Related Cricket News on Sreesanth retirement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47