Ssmriti mandhana
தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட்டை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 61 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.