Team india
வாய்ப்பு கிடைக்காத விரக்த்தில் மனம் திறந்துள்ள பிரித்வி ஷா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்துள்ளது.
அதனால் பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 250 ரன்களை துரத்தும்போது கேப்டன் தவான், கில், ருதுராஜ், இஷான் கிசான் ஆகிய டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி 51/4 என்ற மோசமான தொடக்கத்தை கொடுத்தது தோல்வியை பரிசளித்தது.