Warwickshire
அதிரடியில் மிரட்டிய புஜாரா; பிரம்மிப்பில் ரசிகர்கள்!
இந்திய அணியின் ‘தடுப்புச்சுவர்’ என்று அழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து பந்துகளை தடுத்து தடுப்பாட்டத்தில் மட்டுமே விளையாடும் ஆற்றல் பெற்றவர். டெஸ்டில் மிகமிக அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ரன்களை அடிக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது இருக்கிறது. இதனால்தான், இந்திய ஒருநாள், டி20 அணிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் 2022 தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை புஜாரா பெற்றார். இந்த அணி நேற்று இரவு வார்விக்ஷிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது முதலில் களமிறங்கிய வார்விஷிர் அணி 310 ரன்களை குவித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய சக்சஸ் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது.