
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களையும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் குவித்தது.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 245 ரன்களில் ஆல் அவுட்டாக தற்போது 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
அதன் படி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 259 ரகளை குவித்துள்ளதால் மேலும் 119 ரன்கள் இன்று அடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் முதல் மூன்று நாட்கள் வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி நான்காம் நாளான நேற்று தங்களது அருமையான வலுவான இடத்தினை இந்த போட்டியில் இருந்து தவறவிட்டது என்று கூற வேண்டும்.