இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

Advertisement

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில இளம் வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Advertisement

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் சமீப காலமாக சொந்த மாநில வீரார்களை தேர்வுசெய்வதில் அதிக ஆர்வம் காட்ட தவறிவருகின்றன. ஏனெனில் ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் வீரர்கள் இருப்பது பொதுவாக ஐபிஎல் அணிகளுக்கு உதவும். அவர்களில் உள்நாட்டு நிலைமைகள் பற்றிய அறிவு எப்போதும் நன்மை பயக்கும். மேலும், உள்ளூர் ரசிகர்களும் தங்களின் சொந்த அணி வீரர் விளையாடுவதை பார்ப்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால் சில அணிகள் அதனை செய்ய தவறி வருகின்றனர். 

அந்தவகையில் கடந்த சில சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டு வீரர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆண்ட்ரே சித்தார்த், குர்ஜப்நீத் சிங் உள்ளிட்ட தமிழ்நாடு வீரர்களை தேர்வுசெய்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தது. ஆனால் தற்போதுள்ள ஐபிஎல் அணிகளில் இரு அணிகள் மட்டும் இந்த போக்கை கைடைபிடித்து வருவதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறது.  அதன்பாடி எதிர் வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஒரு உள்நாட்டு வீரரை கூட தேர்வுசெய்யாத அணிகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

1. குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2025 இல் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று. ஐபிஎல் 2022 மற்றும் ஐபிஎல் 2023இல் குஜராத்தியைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அணியில் இருந்து விலகியதையடுத்து இப்போது அந்த அணியில் எந்தவொரு குஜராத் வீரரும் இடம்பிடிக்கவில்லை. அதிலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் உர்வில் படேல் போன்ற வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற நிலையிலு, அவர்களை வாங்க குஜராத் அணி ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் உள்ளூர் வீரர் ஒருவரை கூட தேர்வு செய்யாத அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. மேலும் நீண்ட காலமாகவே கேகேஆர் அணியில் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் இந்த வீரர்கள் ஏலத்தில் முகமது ஷமியை ஒப்பந்தம் செய்ய கேகேஆர் அணி முயற்சித்தது, ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் ஆகாஷ் தீப், முகேஷ் குமார் போன்ற வீரர்களும் ஏலத்தில் பங்கேற்ற நிலையில், கேகேஆர் அணி நிர்வாகம் எந்த உள்ளூர் கிரிக்கெட் வீரரையும் ஒப்பந்தம் செய்யவில்லை.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News