அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெர்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் சதமடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 73 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதற்கு அடுத்த பாந்திலேயே 67 ரன்களைச் சேர்த்திருந்த பிரதிகா ராவலும் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணையும் அபாரமாக விளையாடி அணியின் ரன் வேகத்தை சரியவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 89 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்லீன் தியோல் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபாரமாக விளையாடியா ஜெமிமா ரோட்ரிக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட், அர்லீன் கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியில் கேப்டன் கேபி லூயிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இணைந்த சாரா ஃபோர்ப்ஸ் - குல்டர் ரெய்லி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் குல்டர் ரெய்லி அரைசதம் கடந்தார்.

அதேசமயம் மறுபக்கம் சாரா ஃபோர்ப்ஸ் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒர்லாஅ பிரெண்டர்காஸ்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து 80 ரன்களைச் சேர்த்த நிலையில் குல்டர் ரெய்லியும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் லாரா டெலானி 37 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 254 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News