2nd Test, Day 1: சண்டிமால், மெண்டிஸ் அரைசதம்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலியும், இலங்கை அணியில் பதும் நிஷங்கா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து தங்களது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 36 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, தினேஷ் சண்டிமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்னிலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - ரமேஷ் மெண்டிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷான் பெய்ரிஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தானர். இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.