BAN vs IND, 2nd Test: பீஸ்ட் மோடில் ரிஷப் பந்த்; முன்னிலை பெற்றது இந்தியா!

Updated: Fri, Dec 23 2022 13:58 IST
2nd Test, Day 2: Rishabh Pant and Shreyas Iyer share an unbeaten century stand! (Image Source: Google)

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழ்ந்த நிலையில் தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்று தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. 

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், நிலைத்து நின்று ஆடிய மோமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்தார். இதில், ஒரு சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். பந்து வீச்சில் உனட்கட் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்திய அணியில் கே ராகுல் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்க முதலே தடுமாறிய கே எல் ராகுல் இரண்டு முறை விக்கெட் கண்டத்திலிருந்து தப்பினார். முதல் நாள் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் சீக்கிரமாகவே முடிந்தது. இந்திய அணி முதல் நாள் முடிவில் 19 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ராகுல் 3 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ராகுல் கூடுதலாக 7 ரன்கள் சேர்த்த நிலையில், தைஜுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஷுப்மன் கில் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்து தைஜுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த புஜாரா மற்றும் விராட் கோலி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். எனினும், தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டு வந்த புஜாரா 24 ரன்கள் எடுத்த நிலையில்  டைஜுல் இஸ்லாம் பந்தில் அட்டமிழக்க, விராட் கோலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்த் ஒருபடி மேல் சென்று டெஸ்ட் கிரிக்கெட் என்பதையே மறந்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டார். இதன்மூலம் அரைசதம் கடந்த அவர், சதத்தை நோக்கி நகர்ந்தார். மறுமுனையில் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் கடக்க, இந்திய அணி முன்னிலை நோக்கி நகர்ந்தது.

இதன்மூலம் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 86 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து ஒரு ரன் மட்டுமே பின் தங்கிய நிலையில் இந்திய அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை