இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

அவர்களைத் தவிர்த்து கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்களைச் சேர்த்த்தை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 25, சூர்யகுமார் யாதவ் 14, திலக் வர்மா 18, வாஷிங்டன் சுந்தர் 10, அக்ஸர் படேல் 15, துருவ் ஜுரெல் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய ஹர்திக் பாண்டியாவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில், இந்தியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “எங்கள் அணி வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக பந்து வீசியதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது. இதில் அவர்கள் எவ்வளவு வேகமாக பந்து வீச முடியும் என்பது பற்றி அல்ல, ஆனால் விக்கெட்டுக்கு ஏற்றவாறு அவர்கள் எவ்வளவு சிறப்பாக மாற முடியும் என்பது பற்றியது.  ஆதில் ரஷித் எங்கள் அணியில் மிக முக்கியமான வீரர். 

எங்கள் அணியில் அவர் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். அவரால் சூழலுக்கு ஏற்ப பந்துவீச முடியும். அதேபோல் ஜோஃப்ரா ஆர்ச்சர் எங்கள் அணியின் சூப்பர் ஸ்டார். அவரது பந்துவீச்சில் அடிக்கடி சிக்ஸர்களைக் கொடுக்க மாட்டர், ஒருவேளை அவரின் ஓவரில் ரன்கள் சென்றாலும் அதனை கையாண்டு திரும்பி வருவார். இப்போட்டிக்கான விக்கெட் சற்று வித்தியாசமாக இருந்தது என்று நினைக்கிறேன். இப்போட்டியில் பென் டக்கெட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஒருகட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் ஏமாற்றமடைந்தோம். அதேசமயம் பவர்பிளேயில் விக்கெட்டுகளை எடுப்பது மிக முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து தள்ளி ஆட்டத்தை எடுத்து வந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஷீத் மற்றும் வுட்டுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இறுதியில் அவர்கள் ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதனால் இப்போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News