எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Updated: Fri, Jul 14 2023 14:36 IST
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா (Image Source: Google)

ஆடவர் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது ஆட்டத்தில் யுஏஇஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. 

அதன்படி களமிறக்கிய யுஏஇ அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோனதன் ஃபிகி, அன்ஸ் டாண்டன், லவ்ப்ரீத் சிங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆர்யன்ஷ் சர்மா - அஷ்வந்த் சிதம்பரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்யன்ஷ் சர்மா 38 ரன்களுக்கும், அஷ்வந்த் சிதம்பரம் 46 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் வந்த அலி நேசரும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த முகமது ஃப்ராஸ்தின் 35 ரன்களைச் சேர்த்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும் நிதிஷ் ரெட்டி, மனவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை