மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்

Updated: Sat, Jul 24 2021 13:50 IST
Image Source: Google

ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் சாதித்துள்ளார்.

ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய். 

அதேசமயம் 210 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனை ஹோ சி ஹூய் தங்கப்பதக்கம் வென்றார். பளுதூக்குதல் பிரிவில் இந்திய அணிக்கு கிடைக்கும் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கமும் இதுவாகும். இதற்கு முன்னதாக 2000ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார் கர்ணம் மல்லேஸ்வரி.

இதனிடையே வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்க்கு பிரதமர் மோடி,குடியரசு தலைவர், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். 

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீராபாய் சானு! பளுதூக்குதலின் முற்றிலும் அற்புதமான காட்சி. நீங்கள் காயத்திலிருந்து மீண்டு, தாற்போது இந்தியாவிற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க பதக்கத்தை பெற்று தந்துள்ளீர்கள். நீங்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் ட்விட்டர் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை