இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.

Advertisement

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன். 

Advertisement

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சோபிக்க தவறியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் இருவரும் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பந்துகளுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழப்பது ரசிகர்களை அதிருப்தியடை செய்துள்ளது. இந்நிலையில் அவர்களுடைய தடுமாற்றத்திற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சன் இப்படி ஆட்டமிழந்தது ஒன்றும் கவலைக்குரிய விஷயம் இல்லை, ஆனால் அவர் தொடர்ந்து அப்படி அவுட் ஆக வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளரை தடுத்து விளையாடி, பிறகு மற்ற பந்து வீச்சாளர்களை அடிக்க முயற்சிக்க வேண்டும் . அதேபோல் இத்தொடரில் எந்த வேகப்பந்து வீச்சாளரும் சூர்யகுமார் யாதவுக்கு போதிய வேகத்தைக் கொடுக்கவில்லை, மேலும் விக்கெட்டிலும் வேகமும் பவுன்ஸும் இல்லை.

இதன் காரணமாக அனைத்து பந்துவீச்சாளர்களும் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக ஒரு திட்டத்துடன் பந்துவீசுகின்றனர். அவர் வேகத்திற்கு எதிராக நல்ல ஷாட்களை அடிப்பதால் அவருக்கு வேகம் கொடுக்க மாட்டார்கள். எனவே அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அவர் அடிப்படை விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி சிறிது நேரம் செலவிட்டால், தானாகவே அனைத்து ஷாட்களும் வந்துவிடும்” என்று அறிவுறுத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங் (4&5 போட்டிக்கு மட்டும்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஷிவம் தூபே, ரமந்தீப் சிங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News