தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் துவக்கத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 27.3 ஓவரில் வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்டிலோ பெலுக்வியோ 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement

அதை தொடர்ந்து 117 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக போட்டியிலேயே அசத்தலாக விளையாடி 9 பவுண்டரியுடன் 55* ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் எடுத்து 16.4 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றிக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து முக்கிய பங்காற்றிய அரஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பத்தில் அசத்தினாலும் நாளடைவில் நோ-பால்களை சுமாராக செயல்பட்டு வந்த அவர் நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க டி20 தொடரிலும் ரன்களை வாரி வழங்கி 2ஆவது போட்டியில் தோற்க முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இப்போட்டியில் தம்மால் 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்ததாக அர்ஷ்தீப் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “சற்று புண்ணாக உணர்ந்த வந்த நான், தற்போதைய தருணத்தை விரும்புகிறேன். இதற்கு கடவுள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நன்றிகள். இது மற்ற மைதானங்களை விட சற்று வித்தியாசமாக இருந்ததால் நான் நன்றாக மூச்சை விட்டு ஓடினேன். இந்த நேரத்தில் நான் கேஎல் ராகுலுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர் உன்னால் கம்பேக் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார். அடுத்து வரும் போட்டிகளில் மைதானங்களை பார்த்து அதற்கு தகுந்தார் போல் நாங்கள் கவனம் செலுத்தி வேலை செய்ய உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News