ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றியது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களையும், இங்கிலாந்து அணி 294 ரன்களையும் சேர்த்திருந்தது. 

Advertisement

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலியா 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் இரு இன்னிங்ஸிலும் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தியிருந்தார். 

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டநேரமுடிவில் 30 ரன்களைச் சேர்த்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் ஸாக் கிரௌலி 22 ரன்களுடனும், ஹாசிப் ஹமீத் 8 ரன்களுடனும் கடைசி நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில்  ஹமீத் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மாலன், ரூட் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிரௌலி 77 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவருடன் இணைந்து ஜானி பெர்ஸ்டோவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Advertisement

இதனால் இங்கிலாந்து அணி போட்டியை வெல்ல முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 60 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 41 ரன்னிலும், பட்லர் 11, மார்க் வுட் 0, ஜேக் லீச் 26 என வரிசையாக விக்கெட்டுக்கள் சரிந்தன.

இதனால் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் இறுதியில் நங்கூரம் போல நின்ற ஸ்டூவர்ட் பிராட் - ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தங்களது தடுப்பாட்டத்தின் மூலம் விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றனர். 

இதன்மூலம் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களைச் சேர்த்திருந்தது. மேலும் இங்கிலாந்திடம் கைவசம் ஒரு விக்கெட் இருந்ததினால் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement

மேலும் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்திய உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News