James anderson
அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. அதிலும் இத்தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று முடிந்தது.
காரணம் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஷுப்மன் கில்லுடன் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் வார்த்தை மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2ஆவது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேட்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டர்சனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார்.