நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியானது நேற்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்தது.

Advertisement

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92 ரன்களைடையும், பதும் நிசங்கா 41 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 37.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

Advertisement

இதன் காரணமாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் ஒரு பந்துக்கு 3 ரன்கள் தேவை என்கிற நிலையில் கைவசம் இருந்த இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி நூலிழையில் இந்த போட்டியை தவறவிட்டது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, “உண்மையிலேயே இந்த போட்டி எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்த இலக்கினை வைத்து நாங்கள் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்துவது சவாலாக இருந்தது. இந்த போட்டியில் மெண்டிஸ் மற்றும் அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் எங்களது வீரர்கள் இன்னும் போதிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. தீக்ஷனா மற்றும் வெல்லாலகே ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். 

மேலும் எங்களது வெற்றிக்கான கதவை திறந்து விட்டவர் ரஜிதா என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு முக்கியமான நேரத்தில் அவர் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நேரத்தில் அவர் ஆடியதை பார்க்கும்போது எங்களிடமிருந்து போட்டியை பறித்துச் சென்று விட்டார் என்று நினைத்து விட்டேன்” என கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News