சர்வதேச கிரிக்கெட் மிக வேகமாக மாற்றமடைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதில் கூட பெரிய மாற்றங்கள் உண்டாகி இருக்கிறது. இந்த நிலையில் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகள் மிகுந்த மாற்றத்தை சந்தித்து வருகின்றன. அதிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய தேவை அதிகரித்து இருக்கிறது. அதேபோல் பேட்ஸ்மேன்கள் ஒன்று இரண்டு ஓவர்கள் வீச வேண்டிய தேவையும் உருவாகி இருக்கிறது.

Advertisement

இப்படி இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்கும் அணிகள்தான், தற்போதைய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கின்ற நிலை உருவாகி இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வெள்ளைப்பந்து அணியை 11 வீரர்களும் பேட்டிங் செய்யக்கூடிய அளவில் அமைக்க முடியும். அதே அணியில் குறைந்தது 7 வீரர்கள் பந்து வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

Advertisement

தற்பொழுது இங்கிலாந்தை பார்த்து ஆஸ்திரேலியா அணியும் தனது பாணியை அதே வகைக்கு மாற்றி இருக்கிறது. தற்போது உலகக் கோப்பைக்கு வரை இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் எட்டாவது இடத்தில் கேமரூன் கிரீன் இல்லை மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் விளையாடும் அளவுக்கு மிக வலுவாக இருக்கிறார்கள்.

இதே இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஆல்ரவுண்டர்கள் தாண்டி பந்துவீச்சாளர்கள் குறிப்பிட்ட பேட்டிங் பங்களிப்பை தரக்கூடிய வகையில் இல்லை. அதேபோல் பேட்ஸ்மேன்கள் ஒன்று இரண்டு ஓவர்களை நடுவில் வீசி உதவி செய்யக் கூடிய வகையில் இல்லை. இந்தக் காரணத்தினால் பதினோரு பேரில் ஒரு வீரரை பந்துவீச்சாளராகவே சேர்க்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பேட்டிங் நீளம் குறைகிறது. இது இந்திய அணியின் பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதற்கு தற்போது பதில் அளித்துள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஹம்ப்ரே, “நீண்ட காலமாக உழைத்து ஹர்திக் பாண்டியாவை பந்துவீச்சில் வடிவமைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அவருடைய பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம். நாங்கள் அவருடைய உடல் தகுதியையும், நாங்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதையும் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறோம்.

ஒருமுறை பந்தை அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் அடிப்பார் என்றால், அந்த இடத்தில் அவர் வித்தியாசமான பந்துவீச்சாளராக இருப்பார். அணியின் கண்ணோட்டத்தில் ஹர்திக் பாண்டியா எங்களுக்கு விக்கெட் டேக்கர். திலக் வர்மாவின் அண்டர் 19 காலத்தில் இருந்து நான் அவருடன் பணியாற்றி வருகிறேன். நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பொழுது அவருக்கு அவருக்கு பந்து வீசும் திறன் இருக்கிறது என்பதை உணர்ந்தோம்.

Advertisement

அப்பொழுது இருந்து நாங்கள் அவரை பந்துவீச்சில் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். அவர் ஒரு ஓவரை வீசுவார் என்று கேப்டனுக்கு நம்பிக்கை இருந்தால், அது இரண்டு ஓவராக கூட அதிகரிக்கலாம். ஆனால் இது கூடுதல் பந்துவீச்சாளர் தேவைப்படும் சூழ்நிலையை பொறுத்தது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News