AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் தலா 3 விக்கெடுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும், மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 131 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 156 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்
இதன் காரணமாக 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து மேத்யூஸுடன் இணைந்த குசால் மெண்டிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 76 ரன்களைச் சேர்த்த கையோடு ஏஞ்சலோ மேத்யூஸ் தனது விக்கெட்டை இழக்ந்தார்.
இதனால் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சோபிக்க தவற இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன், மேத்யூ குஹ்னெமன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 75 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கவாஜா 27 ரன்களையும், லபுஷாக்னே 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்திய இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற காணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.