பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் மெல்போர்னில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 8) அடிலெய்டில் நடைபெறவுள்ளது. 

Advertisement

ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை இழக்கும் நிலையில் இருந்து தப்பிக்கும் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடினமாக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டிளில் அந்த அணியின் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 20 சதங்களை அடித்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், பாபர் ஆசாம் 19 சதங்களுடன் இரண்டாம்ம் இடத்தில் உள்ளார்.

இதுதவிர்த்து இப்போட்டியில் பாபர் ஆசதம் சதமடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாவேத் மியான்தத்,சயீத் அன்வர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடிப்பார். அவர்களுடன் பாபர் ஆசாமும் 31 சதங்களை விளசி நான்காம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் யூனிஸ் கான் 41 சதங்களுடன் முதலிடத்திலும், முகமது யூசுப் 39 சதங்களுடன் 2ஆவது இடத்திலும், இன்சமாம் உல் ஹக் 35 சதங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு பாபர் ஆசாம் 92 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த பாகிஸ்தானின் ஐந்தாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்லார். இதுவரை, பாபர் 331 இன்னிங்ஸ் 296 போட்டிகளில் விளையாடி 13908 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப் மற்றும் ஜாவேத் மியான்தத் ஆகியோர் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News