ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டி நேற்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்களையும், சல்மான் ஆகா 45 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல், டாம் லேதம் அரைசதம் கடந்து அசத்தினர். அவர்களுடன் டெவான் கான்வே 48 ரன்களையும், கேன் வில்லியம்சன் 38 ரன்களையும் சேர்க்க, இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தனை வீழ்த்தியதுடன் முத்தரப்பு தொடரையும் வென்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாபர் ஆசாம் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை நாதன் ஸ்மீத் வீசிய நிலையில் ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட பாபர் ஆசாம் அதனை பந்துவீச்சாளருக்கு நேராக அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்தை விட குறைந்த வேகத்தில் வந்ததன் காரணமாக அது நேராக பவுலரை நோக்கி சென்றது.

அதனை சரியாக கணித்த நாதன் ஸ்மித் அந்த பந்தை கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனை சற்று எதிர்பார்க்காத பாபர் ஆசாம் தான் அவுட்டானது நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தர். இதனால் இப்போட்டியில் பாபர் ஆசாம் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் பாபர் ஆசாம் ஆட்டமிழந்த காணொளியானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News